சூலூர்: சூலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜ மாநில தலைவரும், கோவை எம்பி தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது, அங்கு பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் வாகனத்தின் பக்கவாட்டில் ஒரு வாகனம் உரசிவிட்டு சென்றது.
அடுத்த சில நொடிகளில் அங்கு வந்த அண்ணாமலையின் காரை அதிமுகவினர் சிறைபிடித்தனர். இதையடுத்து வேறு ஒரு காரில் அவர் சென்றார். ஆனாலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் தொகுதி அதிமுக எம்எல் கந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.