சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெகநாதனை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.