சென்னை : அயலகத் தமிழர் நலனில் திமுக அரசு அக்கறையோடு செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் தின விழாவை தொடங்கிவைத்த பின் பேசிய அமைச்சர் உதயநிதி, உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழ் பேசுபவர்களை காண முடிகிறது என்றும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.