டெல்லி: திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.