சென்னை: 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதிற்கு தேர்வான 6 ஊராட்சிகளுக்கு தலா 15 லட்சம் பரிசு, கேடயம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேல்மருவத்தூர், குளூர், நிபஞ்சம்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம், அரியனேந்தல் ஊராட்சிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான கிராம விருது ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படுகிறது.