சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. 2017-ல் மாற்றம் இந்தியா அமைப்பின் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசு விளக்கம் அளித்துள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. துணைவேந்தர் தேர்வு நடைமுறையை எப்போது தொடங்குவது, எப்போது முடிப்பது என கால நிர்ணயம் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.