சென்னை: நாதுராம் கோட்சே நாட்டின் மரியாதைக்குரிய நபர் என கூறிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்வது கண்டனத்துக்குரியது. காந்தியின் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.