தஞ்சை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தஞ்சை பயணத்தின்போது கோரிக்கை வைத்த மக்களின் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. லால்குடி அடுத்த ஆலங்குடி மகாஜனம் கிராம மக்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஆலங்குடியில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்துக்கு பேருந்து இயக்கப்படுகிறது.