கரூர்: குளித்தலை அருகே நிலப்பிரச்சனையில் அண்ணனை எரித்துக் கொன்ற அவரது தம்பி குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். கருப்பண்ணனின் தம்பி காத்தவராயன், அவரது மனைவி, மகன் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராசாகவுண்டனூரைச் சேர்ந்த கருப்பண்ணன் (72), தம்பி காத்தவராயன் (68) ஆகியோர் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.