மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகியுள்ளார். ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினார். நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்தின் அடைப்படையில் எப்படி பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும், உத்தரவை பின்பற்றாதவட்டாட்சியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.