சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். முதலீடுகள் மூலம் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை 875 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.