Saturday, May 18, 2024
Home » 9, 10ம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

9, 10ம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

by MuthuKumar

கோவை,மார்ச்7: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:கோவை மாநகராட்சிக்கு 2023-24ம் நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி,தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் போன்ற அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துவதில் பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சியின் கீழே குறிப்பிட்டுள்ள வார்டு பகுதிகளில் வருகிற 9 மற்றும் 10ம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேற்கு மண்டலப்பகுதியில் வார்டு எண் 35ல் தேவாங்க நகர் கற்பக விநாயகர் கோயில் வளாகத்திலும், 10ம் தேதி மட்டும் வார்டு எண் 33 ஹவுசிங் யூனிட் மதுரை வீரன் கோயில் வளாகத்திலும், வார்டு எண் 38ல் பொம்மனாம்பாளையம் மாரியம்மன் கோயில் வளாகத்திலும், வார்டு 42ல் வெங்கட்டாபுரம் மருத கோனார் வீதியிலும், வார்டு 74ல் நாயக்கர் தோட்டம் சமுதாயக்கடத்திலும் மற்றும் வார்டு 75ல் சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

கிழக்கு மண்டலம் வார்டு எண் 7 மற்றும் 8ல் நேரு நகர் கிழக்குப் பகுதியிலும், வார்டு 24ல் குருசாமி நகர் பகுதியிலும், வார்டு எண் 56ல் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் வார்டு எண்.57ல் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியிலும, தெற்கு மண்டலம் வார்டு எண் 97ல் ஈச்சனாரி பகுதியிலும், வார்டு 90ல் போத்தனூர் ஆசிரியர் காலனி வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வார்டு எண்.16ல் ஜனதா நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வார்டு எண் 15ல் சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையத்திலும், வார்டு 19ல் மணியக்காரன்பாளையம் அம்மா உணவகத்திலும், வார்டு எண் 25ல் காந்திமாநகர் அரசு ஆரம்பப்பள்ளியிலும், வார்டு எண்.28ல் காமதேனு நகர் மாநகராட்சி வார்டு அலுவகத்திலும், வார்டு எண் 32ல் நாராயணசாமி வீதி- சிறுவர் பூங்காவிலும், வார்டு 62ல் பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகத்திலும், வார்டு எண் 80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியிலும், வார்டு 84ல் தர்க்கத்தில் இஸ்லாம் ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களிலும் 09.03.2024 மற்றும் 10.03.2024 ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ளது.

You may also like

Leave a Comment

15 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi