திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே அகளி பகுதியில் ஒரு அரபி பாடசாலை உள்ளது. இங்கு நவுஷாத் லத்தீப் (36) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இங்கு படித்து வந்த 4ம் வகுப்பு மாணவியான 9 வயது சிறுமியை, 2018 ஜூலை முதல் 2019 மார்ச் மாதம் வரை நவுஷாத் லத்தீப் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அகளி போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் நவுஷாத் லத்தீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பாலக்காடு அதிவிரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சு, ஆசிரியர் நவுஷாத் லத்தீபுக்கு பல்வேறு பிரிவுகளில் 26 வருடம் கடுங்காவல் சிறையும், ₹1.75 லட்சம் அபராதமும் விதித்து உத்திரவிட்டார். இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்க வேண்டும் என்றும், அபராதத்தை கட்டாவிட்டால் மேலும் மூன்றரை வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்….