Tuesday, May 21, 2024
Home » 8 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு தெலங்கானாவில் எம்பிபிஎஸ் இடம் 4 மடங்கு அதிகரிப்பு: முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்

8 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு தெலங்கானாவில் எம்பிபிஎஸ் இடம் 4 மடங்கு அதிகரிப்பு: முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்

by kannappan

திருமலை: தெலங்கானாவில் எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக 8 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். தெலங்கானா மாநிலத்தில் 8 புதிய மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் வகுப்புகளை பிரகதி பவனில் இருந்தபடி மெய்நிகர் சேவையில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தெலங்கானா வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். தெலங்கானா நாட்டிற்கு வழிகாட்டியாக மாறி வருகிறது. புதிதாக 8 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பெருமைக்குரியது. கொத்தகூடம், நாகர்கர்னூல், மெகபூபாபாத், சங்காரெட்டி, ராமகூடம், வனப்பர்த்தி, ஜெகட்டியாள், மன்சீரியால் ஆகிய 8 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரியின் மூலம் 4 மடங்கு மாணவர் சேர்க்கை சீட் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 850 இடங்கள் இருந்தது. தற்போது 2,790 இடங்களாக அதிகரித்துள்ளது.  எம்பிபிஎஸ் இடங்கள் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. 33 மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகள் கட்டப்படும். இவ்வாறு, அவர் பேசினார். பட்டாசு வெடித்து 2 பேர் படுகாயம் சங்காரெட்டி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டதை கொண்டாட ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் பைக் பேரணியில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர். …

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi