மொடக்குறிச்சி, நவ.9: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.80.40க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.40க்கும், சராசரி விலையாக ரூ.80.40க்கும் ஏலம் போனது. மொத்தம் 903 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் ரூ.72 ஆயிரத்து 601க்கு விற்பனையானது.