Friday, May 17, 2024
Home » 7 தாலுகாக்களில் ஜமாபந்தி தொடங்கியது

7 தாலுகாக்களில் ஜமாபந்தி தொடங்கியது

by Karthik Yash

தர்மபுரி, மே 24: தர்மபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி(வருவாய் தீர்வாயம்) 7 தாலுகாக்களில் நேற்று தொடங்கியது. தர்மபுரி உள்வட்டத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது. கிருஷ்ணாபுரம் உள்வட்டத்தில் இன்று(புதன்கிழமை) ஜமாபந்தி நடக்கிறது. தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று ஜமாபந்தி நடந்தது. தர்மபுரி உள் வட்டத்திற்குட்பட்ட வெள்ளேகவுண்டன்பளையம், விருப்பாட்சிபுரம், கடகத்தூர், அளேதர்மபுரி, ஏ.ரெட்டிஅள்ளி, கே.நடுஅள்ளி, அதகப்பாடி, பாப்பிநாயக்கனஅள்ளி, அன்னசாகரம், உங்குரானஅள்ளி, முக்கல்நாயக்கனஅள்ளி, மிட்டாநூலஅள்ளி தொகுதி, செட்டிக்கரை, நல்லனஅள்ளி, செம்மாண்டகுப்பம், குப்பூர் ஆகிய 16 வருவாய் கிராமத்திற்கான ஜமாபந்தி நேற்று தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

இந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் இருப்பிட சான்று என 472 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. ஜமாபந்தியில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும், முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பென்னாகரம் தாலுகாவில் உள்வட்ட வாரியாக பென்னாகரத்தில் நேற்றும், பெரும்பாலையில் இன்றும், நல்லம்பள்ளியில் நேற்றும், பாளையத்தில் இன்றும், இண்டூரில் நாளையும் நடக்கிறது. பாலக்கோடு தாலுகாவில் உள்வட்ட வாரியாக புலிக்கரை, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்றும் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

five + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi