சேலம், ஏப். 2: சேலம் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் தெற்கு தொகுதிக்குஉட்பட்ட நெத்திமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சங்ககிரியை சேர்ந்த குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ₹5 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ வெள்ளி கொலுசுக்கு தேவையான கொக்கியை கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து பறக்கும்படையினர் 7 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அதனை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
7 கிலோ வெள்ளி சிக்கியது
previous post