சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர்(புள்ளியல்) 1, ஆராய்ச்சி உதவியாளர்(பொருளாதாரம்) 1, ஆராய்ச்சி உதவியாளர்(புவியியல்) 1, ஆராய்ச்சி உதவியாளர்(சமூகவியல்) 1 என 4 பணியிடங்கள். இந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு கிடையாது. நேர்முக தேர்வு பதவியில் ஆராய்ச்சி உதவியாளர்(மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை) 2 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு ஜூலை 25ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி விண்ணப்பங்களை ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 9, 10ம் தேதிகளில் கணினி வழி தேர்வாக நடைபெறுகிறது. மேலும் இத்தேர்வுக்கான கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
6 ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
previous post