வியட்நாம்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். குறுகிய பாதையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலையில் நீண்டநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.