சென்னை: தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, வ.உ.சி தெருவை சேர்ந்தவர் ராம்பாபு யாதவ் (30), சமையல்காரர். இவர், நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டையில் நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த 4 பேர், அவர் கழுத்தில் கிடந்த தங்க டாலரை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில், தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் ரோகித்குமார் (19), தனது நண்பர்களான தேனாம்பேட்டை ராஜிநாயக்கன் தெருவை சேர்ந்த மகி (19), தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்த தினேஷ் (20) மற்றும் தேனாம்பேட்டை பருவா நகரை சேர்ந்த சதீஷ் (எ) குள்ளா (20) ஆகியோர், நகை பறித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.
நகை பறித்த 4 பேர் கைது
previous post