சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 300 பேரிடம் ரூ.15 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்த 4 பேரும் மோசடி வழக்கில் கைது. மோசடி செய்த தினேஷ் (37), பிரேம் கிரிபால் (38), திலீப்குமார் (41), அருண்குமார் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.