Sunday, September 1, 2024
Home » 4 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம்: முதல்வருக்கு பாராட்டு

4 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம்: முதல்வருக்கு பாராட்டு

by Neethimaan


ஆலந்தூர். சென்னை பரங்கிமலை, தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் போன்ற 4 சுரங்கப்பாதைகள் மழை வெள்ளத்தில் நிரம்பி வழிந்ததால் மூடப்பட்டன. தற்போது, மழைக்குப் பின் இந்த 4 சுரங்கப்பாதைகளில் மீண்டும் போக்குவரத்து சீரானது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் பகுதிகள் வெள்ளைக்காடாய் காணப்பட்டன. ஆனால், புயல் மற்றும் மழை நின்ற பிறகு இந்த பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது குறிப்பாக நங்கநல்லூர், இந்து காலனி, டிஎன்ஜிஒ காலனி, ஏஜிஎஸ் காலனி போன்ற பகுதிகளில் தேங்கிய மழை நீர், சாய்ந்த மரங்கள் அகற்றும் பணி ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடந்தது.

மாநகராட்சி ஊழியர்கள் துரித நடவடிக்கையில் மழைநீர் மற்றும் மரங்களை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் மழை வந்து போன சுவடே தெரியாமல் காணப்பட்டது. இந்த உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் முதல்வர், மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் ஆகியோருக்கு சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi