புழல்: புழல் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் போலீசார் நேற்று காலை புழல் அடுத்த புத்தகரம் பெருமாள் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கோயிலின் அருகில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
தீவிர விசாரணையில், அவர்கள் புத்தகரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நகரை சேர்ந்த கிஷோர் (19), பாரதிதாசன் நகரை சேர்ந்த சாமுவேல் (37), அரியலூர் மாவட்டம் வஉசி நகரை சேர்ந்த விக்னேஷ் (18) என்பதும், இவர்கள் மின்சார பெட்டிகளை திருடி விற்பனை செய்த வந்ததும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.