புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நாகலாந்து வேளாண் பிரிவு கூடுதல் செயலாளர் ஜிதேந்திர குப்தா மற்றும் அவருடன் அப்போதைய துணை வன பாதுகாவலர் ராம்பாக்காய், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுண ஆட்டோ விஹோய் ஆகியோர் திமாபூரில் இருந்து டெல்லிக்கு லட்சகணக்கான பணத்துடன் விமானத்தில் பயணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சோதனையின்போது மூன்று பேரின் பையில் இருந்தும் ரூ.2கோடி அளவுக்கு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வருமான வரித்துறையின் புகாரின்பேரின் அதிகாரிகள் 3 பேர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.