ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்தில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. பிற்பகல் 3.48க்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 புள்ளிகளாக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 3.48மணியளவில் கார்கிலை மையமாக கொண்டு 10கி.மீ.ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டது. இவை முறையே ரிக்டரில் 4.8 மற்றும் 3.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனிடையே ஜம்மு காஷ்மீன் கிஸ்த்வாரிலும் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.