பள்ளிபாளையம், ஏப்.13: மோடமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 336 பயனாளிகளுக்கு ₹2.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர். முகாமில், 187 பயனாளிகளுக்கு வீட்டுமனை, 18 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 23 பேருக்கு ரேசன் கார்டு, ஐந்து பேருக்கு வேளாண்மை உபகரணங்கள், 3 பேருக்கு பட்டுப்புழு வளர்க்க தேவையான உதவிகள், 4 பேருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்கடன், மூன்று பேருக்கு கார்மென்ட்ஸ் அமைக்க கடனுதவி என 336 பயனாளிகளுக்கு ₹2.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில், கோட்டாட்சியர் கௌசல்யா, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், தாசில்தார் சண்முகவேல், வருவாய் ஆய்வாளர் கிருத்திகா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
336 பயனாளிகளுக்கு நல உதவி வழங்கல்
previous post