தர்மபுரி, மார்ச் 26: தர்மபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடியில், தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், தர்மபுரி மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடுகளை தர்மபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு வருகின்றனர். நேற்று தர்மபுரியை சேர்ந்த 52 விவசாயிகள் மட்டும், 3,432 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் வெண்பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹489க்கும், சரசாரியாக ₹405க்கும், குறைந்தபட்சமாக ₹272க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹13 லட்சத்து 90ஆயிரத்து 536க்கு பருத்தி ஏலம் போனது.
3.4 டன் பட்டுக்கூடுகள் ₹13.9 லட்சத்திற்கு ஏலம்
previous post