Wednesday, May 29, 2024
Home » 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: அணைக்கு வரும் 9 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே திறப்பு

3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: அணைக்கு வரும் 9 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே திறப்பு

by kannappan

சேலம் : நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. காவேரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1000 கனடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சராசரியாக 9000 கனஅடிக்கு மேல் இருந்த நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக எட்டியுள்ளது. நடப்பாண்டின் முதன் முறையாக கடந்த ஜூலை 16-ம் தேதியும், 2-வது முறையாக அக்டோபர் 12-ம் தேதியும், 3-வது முறையாக டிசம்பர் 7-ம் தேதியும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து அணைக்கு வரும் 9000 கனஅடி  நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 45 முறை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது.    …

You may also like

Leave a Comment

14 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi