சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புரசைவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.423) மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, விற்பனையாளர் சசிகுமார் மற்றும் கடை மேற்பார்வையாளர் ராஜசேகர் ஆகிய இருவரும், அண்ணாநகர் பகுதியில் உள்ள உயர் ரக மதுபான கடையில் (எண்.440) விற்பனையாளர் அன்பழகன் ஆகிய மூவரும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. எனவே பணியாளர்கள் மூவரும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்….