புதுடெல்லி: அகமதாபாத்தின் காண்ட் பகுதியில் 3டி அச்சு முறையில் ராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு அடுக்கு குடியிருப்புக் கட்டிடத்தை ராணுவம் நேற்று திறந்துள்ளது. மிக்காப் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ராணுவ பொறியியல் சேவை அமைப்பு 3டி விரைவுக் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கட்டிடத்தை உருவாக்கி உள்ளது. முப்பரிமாண தொழில்நுட்ப அச்சாக்க முறையைப் பயன்படுத்தி அடித்தளம், சுவர்கள் மற்றும் ஜன்னல் அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. 71 சதுர மீட்டர் அளவுள்ள இந்தக் கட்டிடம், 12 வாரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேரிடர் பாதுகாப்பு கட்டமைப்புகள், நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிட அமைப்பு, பசுமைக் கட்டிடத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றைக் அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்பு கட்டிடமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் நவீனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது….
3டி அச்சு தொழில்நுட்பத்தில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு
previous post