கெய்ரோ: எகிப்தின் சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதியதால் உலகளாவிய நீர்வழிப்பாதையில் போக்குவரத்து தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி செல்லும் பிடபிள்யூ லெஸ்மெஸ் என்ற கப்பல் இயந்திர கோளாறு காரணமாக சூயஸ் கால்வாயில் நின்றது. அப்போது கேமன் தீவுக்கு சொந்தமான பர்ரி என்ற எண்ணெய் பொருட்கள் அடங்கிய கப்பல், இயந்திர கோளாறால் பாதிக்கப்பட்ட கப்பலுடன் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கப்பல் மோதியது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.