தர்மபுரி, பிப்.5: தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 22 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உட்பட 28 காலி பணியிடங்களுக்கு, புதியதாக ஆட்களை தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
எனவே, தர்மபுரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பென்னாகரம் உட்கோட்டத்தை சேர்ந்த பென்னாகரம், ஒகேனக்கல், பெரும்பாலை, இண்டூர், பாப்பாரப்பட்டி ஆகிய காவல் சரகத்திற்குள் வசிக்கும் விருப்பமுள்ள நபர்கள், இன்றுக்குள் (5ம் தேதி) அசல் ஆவணங்களுடன், ஊர்க்காவல் படை அலுவலகம், சாலை விநாயகர் கோயில் தெரு, தாலுகா அலுவலகம் எதிரில், தர்மபுரி என்ற முகவரிக்கு வந்து விண்ணப்பம் பெற்று வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
நேரில் வருபவர்கள் 10ம் வகுப்பு பாஸ், பெயில் மார்க் ஷீட், டிசி, சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் காடு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 4 கொண்டு வரவேண்டும். மேலும் தொடர்புக்கு 9487829949, 8870647333 9498170105 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.