தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் கிடையில் அடைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் பலி.கடலாடி அருகே டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் தொண்டி அருகே முள்ளிமுனை பகுதியில் ஆடுகளை மேய்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஓலையால் செய்யப்பட்ட மூன்று கிடையில் ஆடுகளை அடைத்துள்ளார். நேற்று காலை கிடைகளை திறந்த பார்த்த போது ஒரு கிடையில் அடைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தது.இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் இப்பகுதிக்கு ஆடு மேய்க்க வருவது வழக்கம் நேற்று இரவு ஒரு கிடையில் அடைத்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து ஆடுகளும் இறந்தது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்ணீருடன் கூறினார்….