ஈரான்: 2023-ம் ஆண்டு அமைதிக்கான ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை நேர்வுக் குழு அறிவித்தது. ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஈரானில் பெண்களுக்காக போராடி பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதி தற்போதும் சிறையில்தான் உள்ளார்.