சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு கரை, மேற்கு கரை கால்வாய் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.