Friday, May 17, 2024
Home » 2 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்கின் விசாரணை; அசோக் நகர் மகளிர் போலீசுக்கு மாற்றம்

2 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்கின் விசாரணை; அசோக் நகர் மகளிர் போலீசுக்கு மாற்றம்

by kannappan

சென்னை:  சென்னை அசோக்நகரை சேர்ந்த ஆர்.ராணி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மாமனாருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நான், எனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது கணவரின் அண்ணன் ஏகப்பன் என்பவர் எங்களை வீட்டை விட்டு துரத்த திட்டமிட்டு, எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்.இதுகுறித்து அசோக்நகர் சட்டம் ஒழுங்கு போலீசில் 2020 ஜூலையில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரை அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், அசோக்குமார் ஆஜராகி, புகார் மீது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி, எப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகும் வழக்கை போலீசார் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்….

You may also like

Leave a Comment

11 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi