Wednesday, May 15, 2024
Home » 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 13 வயது சிறுவன்: ஆந்திராவில் அநியாயம்

18 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 13 வயது சிறுவன்: ஆந்திராவில் அநியாயம்

by kannappan

காளஹஸ்தி: ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 18 வயது பெண்ணை 13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணை கல்லால் தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது பெண். இவரது தந்தை ஆடுகளை பராமரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அப்பெண்ணின் தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் ஆடுகளை கிராமம் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், இளம்பெண்ணிடம் நைசாக பேசிக்கொண்டிருந்தாராம். பின்னர் திடீரென இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், சிறுவனை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், இளம்பெண்ணை கல்லால் சரமாரி தாக்கியுள்ளார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். இதில் படுகாயமடைந்த இளம்பெண் அலறினார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் வடமாலப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான சிறுவனை நேற்று இரவில் கைது செய்தனர்.  …

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi