Thursday, May 9, 2024
Home » ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் போட்டி கடுமையாக இருக்கும்: ஸ்ரீகாந்த் கணிப்பு

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் போட்டி கடுமையாக இருக்கும்: ஸ்ரீகாந்த் கணிப்பு

by Arun Kumar

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசன் மார்ச் 22ல் சென்னையில் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்களின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கே.ஸ்ரீகாந்த், தொடக்க ஆட்டக்காரர் எஸ்.பத்ரிநாத் பங்கேற்றனர்.
17வது சீசனில் பங்கேற்கும் அணிகளின் பலம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: காலம் மாறிவிட்டது.

அப்போதைய கேப்டன் கபில்தேவ் போன்றவர்களுடன் இப்போது இருப்பவர்களை ஒப்பிடக்கூடாது. அதே சமயம் கபில்தேவ் போல் அதிரடி ஆட்டக்காரர்கள் இப்போதும் களத்தில் இருக்கின்றனர். களத்தில் சூழ்நிலையை உணர்ந்து முடிவெடுப்பதில் தோனி சிறப்பாகச் செயல்படுகிறார். காயம் காரணமாக அவதிப்பட்டதால் கடந்த தொடரில் அணியை வழிநடத்தும் பணியில் மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இப்போது அறுவை சிகிச்சை முடிந்து நல்ல உடல்திறனுடன் உள்ளார். அதனால் இந்த தொடரில் விளையாடவும் செய்வார். ரச்சின் ரவீந்திரா போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்களை கொண்ட அணியாகவும் சிஎஸ்கே இருக்கிறது.

இந்த தொடரில் அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்தவையாக உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும். குறிப்பாக… சென்னை, பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். கோஹ்லி எப்போதும் ‘கிங்’தான். அதனால் அவர் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் மட்டும் விளையாடினால் போதாது. சக வீரர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஒரு வர்ணனையாளராக சென்னை அணிக்கு சாதகமாக பேச வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் எங்களுக்கு இல்லை. நாங்கள் நடுநிலைமையோடுதான் செயல்படுகிறோம். தவறுகளை நாங்கள் விமர்சிக்க தவறியதில்லை. இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 2024 சீசனில் ஸ்ரீகாந்த், பத்ரிநாத் ஆகியோருடன் முன்னாள் வீரர்கள் எல்.பாலாஜி, முரளி விஜய், வீராங்கனை திருஷ் காமினி உள்பட பலருடன், ஐபிஎல் தொடரில் விளையாடும் நாராயண் ஜெகதீசன், முருகன் அஸ்வின் ஆகியோரும் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi