கிருஷ்ணகிரி, டிச.9: பர்கூர் அடுத்த பையனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் 16 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு, வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் பர்கூர் போலீசில் புகாரளித்தனர். அதில், தம்மாகவுண்டனூரைச் சேர்ந்த தொழிலாளி காளிதாஸ் என்பவர், தங்கள் மகளை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
16 வயது சிறுமி கடத்தல் தொழிலாளி மீது புகார்
previous post