Monday, May 20, 2024
Home » 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கு தகுதிச்சான்று பெற கட்டணம் 13,500ஆக அதிகரிப்பு: ஒன்றிய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கு தகுதிச்சான்று பெற கட்டணம் 13,500ஆக அதிகரிப்பு: ஒன்றிய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

by kannappan

சேலம்: 15 இந்தியா முழுவதும் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த லாரிகள் மூலம் டோல்கேட் கட்டணம், சரக்கு போக்குவரத்து, வாகன பதிவுக்கட்டணம், தகுதிச்சான்று, வாகன உதிரிபாகங்கள், டீசல் விற்பனை என பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகள் தகுதிச்சான்று பெறுவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் லாரி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அந்த நிலைமை மாறி, லாரிகளுக்கு ஓரளவுக்கு சரக்குகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை அடிக்கடி உயர்ந்து மேலும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 15 ஆண்டுகளுக்கு மேலான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் வாகனங்கள் உடைக்கப்படும் என்றும், அந்த வாகனத்திற்கு உரியதொகை நிர்ணயம் செய்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இப்போது, ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான  கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. நேற்றுமுன்தினம் வரை ஒரு லாரிக்கு தகுதிச்சான்று பெற கட்டணம் ₹850ஆக இருந்தது. நேற்றுமுதல் அந்த கட்டணம் ₹13,500 என்று அதிகரித்துள்ளது. உரிய காலத்தில் தகுதிச்சான்று பெறவில்லை என்றால், நாள் ஒன்றுக்கு ₹50 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ஒன்று, இரண்டு லாரிகள் வைத்து இயக்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிக்கிறது எனக்கூறி ஒன்றிய அரசு ஏற்கனவே 15 ஆண்டுகளான வாகனங்கள் உடைக்கப்படும் என்று அறிவித்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ₹13,500 கொடுத்து தகுதிச்சான்று பெற்றால் மட்டும் அந்த வாகனத்தால் சூற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று சொல்ல முடியுமா?  எனவே ஒன்றிய அரசு இதற்கு உரிய  விளக்கம் அளிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெறவேண்டும்.இவ்வாறு தனராஜ் கூறினார்….

You may also like

Leave a Comment

20 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi