திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140.35 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 1,817 கனஅடியாக குறைந்தது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141, 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். 142 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்தால் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரிநீர் திறக்கப்படும்.