கரூர், மே 25: கரூர் மாநகராட்சி பள்ளியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.ஆண்டுதோறும் விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஜூன் 6ம்தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு, பின்னர் ஒன்றியம் வாரியாக அனுப்பி வைக்கப்படும். அதன்படி, கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக ஒன்றியம் வாரியாக வேன்களில் ஏற்றி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.