சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிதம்பரத்தில் இருந்து சேலம் சென்ற பேருந்து புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தத்தில் வீட்டுக்குள் புகுந்து விபத்து. பேருந்து புகுந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.