சென்னை: 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான முதல்வரின் தனித் தீர்மானத்துக்கு நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பெயர் வைத்த மீன்வள பல்கலைக்கழக மசோதாவும் இதில் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. விவரங்கள் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.