Friday, May 17, 2024
Home » 1,016 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ₹48.81 கோடி மதிப்பிலான கடனுதவி: அமைச்சர் காந்தி வழங்கினார்

1,016 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ₹48.81 கோடி மதிப்பிலான கடனுதவி: அமைச்சர் காந்தி வழங்கினார்

by Karthik Yash

திருவள்ளூர், பிப். 10: திருவள்ளூரில் செயல்படும் 1,016 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹48.81 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கலையரங்க வளாகத்தில் மகளிர் குழுக்களுக்கான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, எம்எல்ஏ க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் கேவிஜி. உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ச.செல்வராணி வரவேற்றார்.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார். அப்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 420 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 840 பேருக்கு ₹40.37 கோடியும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான பெருங்கடன் 9 குழுக்களைச் சேர்ந்த 18 பேருக்கு ₹6.83 கோடியும், சமுதாய முதலீட்டு நிதி ₹86 குழுக்களைச் சேர்ந்த 86 பேருக்கு ₹1.29 கோடி, சுழல் நிதியும், 39 பேருக்கு ₹6 லட்சமும், வட்டார வள மையக்கடன் 3 குழுக்களுக்கு ₹11 லட்சம் என மொத்தம் 1,016 பேருக்கு ₹48.81 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதோடு, மகளிர் வாழ்வு மேம்பாடு அடையும் நோக்கமாக கொண்டு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவைகளும் இந்த நிகழ்ச்சி மூலம் வழங்கப்படுகிறது என்றார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, நகர, ஒன்றிய, செயலாளர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ், மகாலிங்கம், வர்த்தக அணி அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி, பட்டரை பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சிவசங்கரி உதயகுமார், சரஸ்வதி சந்திரசேகர், விஜயகுமாரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi