சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகத்துக்கு இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிவிப்பு: சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 22ம் தேதி(இன்று) ஒருநாள் மட்டும் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை வழங்கிட தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடமிருந்து கோரிக்கை வரப்பெற்றது. இந்த கோரிக்கையினை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 22ம் தேதி(இன்று) ஒருநாள் மட்டும் அலுவலக செயல்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இனிவரும் சனிக்கிழமைகளில் அவ்வலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….