சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்களை நிரப்பாததால் அரசு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் என்று சிஐடியூ கூறியுள்ளது. 15.000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் சிலர் பணிமனைக்கு வந்ததால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்