சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்கியதையடுத்து பத்தரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 6 சவரனுக்கு குறைவாக வைக்கப்பட்டுள்ள கடன் ரத்து செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளது. …