ஊட்டி, ஏப். 5: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை 6,862 பேர் எழுதினர். 95 பேர் எழுதவில்லை. தனித்தேர்வர்களில் அறிவியல் பாட தேர்வில் ெமாத்தம் 152 பேரில் 141 பேர் தேர்வு எழுதினர். 11 பேர் வரவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்றோர் மொத்தம் 262 மாணவர்கள். அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதியுள்ளனர்.