காரிமங்கலம், மார்ச் 20: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 550 மாடுகள், 600 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், ₹34 லட்சத்திற்கு மாடுகளும், 36 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹3 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம் ₹73 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.